ஸ்ரீ வித்தக விநாயகர் ஸ்ரீ சந்தோஷி மாதா ஆலயத்தின் கும்பாபிஷேக விழா

சென்னை புழுதிவாக்கம் அன்னை சத்யா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வித்தக விநாயகர் ஸ்ரீ சந்தோஷி மாதா ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்..

முன்னதாக திருக்கோவிலில் மகா கணபதி ஹோமம் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் நவகிரக ஹோமம் நடைபெற்றது, பின்னர் மூன்று கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு பூர்ணாஹூதி யாத்ராதானம் மேற்கொள்ளப்பட்டது,பின்னர் கலச புறப்பாடு நடைபெற்று வேதாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க கலசங்களில் புனிதநீர் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது…

பின்னர் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு மகா தீப ஆராதனை காட்டப்பட்டது…

மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் மடிப்பாக்கம் புழுதிவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டு வித்தக விநாயகர் மற்றும் சந்தோஷி மாதா அருளை பெற்று சென்றனர்…

பின்னர் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஆலய விழா குழுவினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது…

மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீ வித்தக விநாயகர் ஸ்ரீ சந்தோஷி மாதா ஆலயத்தின் தலைவர் கோவிந்தன் செயலாளர் திருவேங்கடம் பொருளாளர் முருகேசன்
உள்ளிட்ட ஆலயத்தின் முக்கிய நிர்வாகிகள், தொழிலதிபர்கள், ஆலய உபயதாரர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *